புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் ரவுடிகளுக்கு இடையே மோதல்
Dec 2 2020 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காலாப்பட்டு மத்திய சிறையில், பாம் ரவி என்ற ரவுடிக்கும், தடி அய்யனார் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தடி அய்யனார், சிலருடன் சேர்ந்து, பாம் ரவியைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாம் ரவி, சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் அளித்த புகாரின்பேரில், தடி அய்யனார், அஜித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.