"டெல்லி சலோ" போராட்டத்தில் விவசாயிகள் மீது போலீசை ஏவி தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஹரியானா முதல்வர் வீடு முன்பு காங்கிரஸ் போராட்டம்
Dec 2 2020 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
"டெல்லி சலோ" போராட்டத்தில் விவசாயிகள் மீது போலீசை ஏவி தாக்குதல் நடத்திய ஹரியானா அரசை கண்டித்து, முதல்வர் திரு.மனோகர்லால் கட்டார் வீட்டின் முன்பு, பஞ்சாப் மாநில இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியதற்காக, முதல்வர் மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.