இந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை நெருங்கியது - கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று
Dec 3 2020 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 551 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 35 ஆயிரத்து 551 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 லட்சத்து 34 ஆயிரத்து 965-ஆக உயர்ந்துள்ளது. இதில், 4 லட்சத்து 22 ஆயிரத்து 943 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 89 லட்சத்து 73 ஆயிரத்து 373 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 526 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 648-ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.