கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரதமர் மோதியின் நிலைப்பாடு என்ன? - ராகுல் காந்தி கேள்வி
Dec 3 2020 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரதமர் திரு. நரேந்திர மோதியின் நிலைப்பாடு என்ன? என்று திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை ஒரு விதமாக பேசுவதாகவும், பிரதமர் ஒருவிதமாக பேசுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என திரு. மோதி தெரிவித்ததையும், மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அண்மையில் கூறியதையும், திரு. ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.