வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் அது தேசத்திற்கு இழைக்கப்படும் துரோகம் : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தாக்கு
Dec 3 2020 9:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெறுவதற்கும் குறைவாக எதனை ஏற்றுக் கொண்டாலும், அது விவசாயிகளுக்கும் தேசத்திற்கும் இழைக்கும் துரோகம் என காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளுடன் 4-வது கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், திரு.ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.