விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவலா? - இன்று பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Jan 13 2021 8:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனரா? என்பது குறித்து மத்திய அரசு இன்று பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்ற போது, போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவல் உண்மைதானா என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் திரு. கே.கே. வேணுகோபால், போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனரா? என்பது தொடர்பாக, மத்திய அரசு இன்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.