கொரோனா தடுப்பூசி வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்
Jan 17 2021 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என டெல்லி முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, தடுப்பூசிகளும் போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வு நாட்டில் தொடங்கியுள்ளதால், தடுப்பு மருந்து குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டியுள்ளார்.