சென்னை உட்பட நாட்டின் 8 பகுதிகளில் இருந்து குஜராத்தின் கேவாடியா நகருக்கு நேரடி ரயில் போக்குவரத்து - சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு
Jan 17 2021 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சென்ட்ரல் உட்பட நாட்டின் 8 பகுதிகளில் இருந்து குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு ரயில் சேவையை பிரதமர் திரு.நரேந்திர மோதி இன்று தொடங்கி வைத்தார்.
குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள கேவாடியாவுக்கு சென்னை, வாரணாசி, மும்பை, தாகூர், அகமதாபாத், டெல்லி ஹரசர் நிசாமுதீன், ரேவா ஆகிய 8 நகரங்களில் இருந்து விரைவு ரயில் சேவை இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திரமோதி காணொலியில் கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய மோதி, டாக்டர் எம்.ஜி.ஆரின். பிறந்தநாளில், சென்னை புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து கேவாடியாவுக்கு ரயில் சேவையை தொடங்கி வைப்பது இனிமையான தற்செயல் நிகழ்வு என குறிப்பிட்டார். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஏழைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று என்றும் மோதி குறிப்பிட்டார்.