புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து : ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோதி
Jan 17 2021 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக, அவரது 104-வது பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் திரு.நரேந்திரமோதி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு.நரேந்திர மோதி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனவும், திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார் - எம்.ஜி.ஆரது பிறந்தநாளில், அவருக்கு தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதமர் மோதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.