இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Jan 17 2021 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 96 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 2 லட்சத்து 8 ஆயிரத்து 826 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.