உரிமைக்காக போராடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா? - மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கேள்வி
Jan 19 2021 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உரிமைக்காக போராடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா ? என மத்திய அரசுக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தோர் ஊடுருவியுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதற்கு காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் திரு அமரீந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், உரிமைக்காக போராடும் விவசாயிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது என்றும், விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.