சூரத் அருகே, நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய பயங்கரம் - 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
Jan 19 2021 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம், சூரத் அருகே, நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில், 15 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூரத்தில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொசம்பா என்ற கிராமத்தில், நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் மீது, இன்று அதிகாலையில், லாரி ஒன்று மோதியது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 12 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 தொழிலாளர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 5 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.