துறை ரீதியான கோப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி தரக் கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் கந்தசாமி தர்ணா போராட்டம்
Jan 19 2021 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் திரு.கந்தசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் திரு.கந்தசாமி,
தனது துறை தொடர்பான 15 கோப்புகள் குறித்து விவாதிக்க துணைநிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி நேரம் ஒதுக்கித்தர வலியுறுத்தி, கடந்த 10-ம் தேதி முதல் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், தனது துறை விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இன்று செல்லப்போவதாகத் தெரிவித்தார். அதன்படி, இன்று காலை தனது காரில் அமைச்சர் திரு.கந்தசாமி சென்றபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அமைச்சர் அப்பகுதியிலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.