கொரோனா காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தகவல்
Jan 19 2021 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தின விழாவை பார்வையிட வழக்கமாக 1 லட்சத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றும், நிகழ்ச்சி முடியும் வரை முகக் கவசம் அணிவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாசார நிகழ்ச்சிகளும் குறைக்கப்பட்டுள்ளன. குடியரசு தின அணிவகுப்பானது, விஜய் சவுக்கில் ஆரம்பித்து, தேசிய மைதானத்தில் முடிவடையும். கொரோனா காரணமாக அணிவகுப்பின் நீளம் 8 கிலோ மீட்டரிலிருந்து 3 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு நடக்கும் இடத்தில் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.