கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தயங்கக் கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்
Jan 20 2021 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் திரு. வி.கே.பால், கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இத்தகைய சூழலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிலர் மறுப்பது அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியால் சிலருக்கு லேசான பக்கவிளைவுகள் ஏற்படுவது இயல்பானது என்பதால், வதந்திகளைப் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பணியார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.