மாவோயிஸ்டுகளை விட மிக ஆபத்தானது பாரதிய ஜனதா - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு
Jan 20 2021 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா கட்சி, மாவோயிஸ்டுகளை விடவும் மிக ஆபத்தானது என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் அடுத்த 3 மாதங்களில் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் கட்சியும், பாரதிய ஜனதாக கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், Purulia மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க.-வில் சேர விரும்புபவர்கள் வெளியேறலாம் என்றும், பா.ஜ.க.-வுக்கு ஒருபோதும் தங்களது கட்சி தலைவணங்காது என்றும் திட்டவட்டமாக கூறினார். மாவோயிஸ்டுகளை விட மிகவும் ஆபத்தான கட்சி பா.ஜ.க. என அவர் விமர்சித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில்போது, ஆதிவாசி மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து பா.ஜ.க. ஏமாற்றியதாக முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.