மாலத்தீவு, நேபாளம் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அனுப்பி வைக்கிறது
Jan 20 2021 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாலத்தீவு, நேபாளம் உள்பட 6 நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்யும் வகையில், கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாடு, வெளிநாடு தேவையை பொறுத்து, மேலும் பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.