விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையே முடிவு செய்யலாம் என்றும் கருத்து
Jan 20 2021 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டம் 56வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தற்கு டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் தாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கப்போவதில்லை என தெரிவித்த தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே, இந்த விவகாரத்தில் காவல்துறையினரே முடிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதால், விவசாயிகளின் டிராக்டர் பேரணியை அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசே முடிவு செய்து கொள்ளலாம் - எனவே, மனுவை திரும்பப்பெறலாம் என்றும் அறிவுறுத்தினார்.