புதுச்சேரியில் 31 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 38,737ஆக அதிகரிப்பு
Jan 20 2021 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 737ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனை மற்றும் வீடுகளில் 296 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 37 ஆயிரத்து 798 பேர், நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் இதுவரை 643 பேர் உயிரிழந்துள்ளனர்.