விவசாயிகளின் டிராக்டர்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என பெட்ரோல் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் - உத்தரப்பிரதேச போலீசார் மீதான குற்றச்சாட்டால் பரபரப்பு

Jan 25 2021 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில், விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என உத்திரப்பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி எல்லையில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம், 2-வது மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து, குடியரசு தினத்தன்று பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில், பேரணியாக செல்லவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, உத்தரப்பிரதேச காவல்துறை, காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு, விவசாயிகளின் வாகனங்களுக்கு எரிபொருள் தரக்கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. பல்வேறு எரிபொருள் நிலையங்களில் இந்த உத்தரவு ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கமளித்த காவல்துறை அதிகாரிகள், சமூக ஊடகங்களில் வெளியான அந்த உத்தரவு, Suhwal காவல்நிலையத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் இந்த உத்தரவு திரும்பப்பெறப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00