பா.ஜ.க.வின் வீழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் இருந்து தொடங்கும் : புதுச்சேரி மக்கள் பா.ஜ.க.வுக்கு தகுந்த பதிலடி கொடுப்பர் - வீரப்ப மொய்லி
Feb 25 2021 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பா.ஜ.க.வின் வீழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் இருந்து தொடங்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். புதுச்சேரி தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தேர்தல் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் திரு.வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு செயல்படக் கூடாது என்பதற்காகவே, துணைநிலை ஆளுநராக திருமதி. கிரண் பேடி நியமிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவித்தார். தற்போது தேர்தல் நேரம் என்பதாலேயே, அவர், துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். பிரதமர் திரு. மோடியும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவும் புதுச்சேரியின் ஜனநாயகத்தை கொலை செய்து விட்டனர் எனத் தெரிவித்தார். ஆனால் பா.ஜ.க.வின் சர்வாதிகார செயலுக்கு புதுச்சேரி வாக்காளர்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் எனக் கூறினார். நாட்டிலேயே பா.ஜ.க. வீழ்வதன் தொடக்கமாகப் புதுச்சேரி தேர்தல் இருக்கும் என்றும் திரு. வீரப்ப மொய்லி தெரிவித்தார்.