நாடு முழுவதும் குறுகிய தூர பயணியர் ரயில்களுக்கான கட்டணம் அதிகரிப்பு- கொரோனா காலத்தில் பயணிகளின் தேவையற்ற பயணத்தை குறைக்கவே நடவடிக்கை என ரயில் நிர்வாகம் தகவல்
Feb 25 2021 12:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் குறுகிய தூர பயணியர் ரயில்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று முற்றிலும் குறையாத நிலையில், பொதுமக்கள் தேவையின்றி ரயிலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வு புறநகர் ரயில்களுக்கு பொருந்தாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.