பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து எலெக்டரிக் வாகனத்தில் பயணித்தார் மம்தா பானர்ஜி
Feb 25 2021 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, கையில் கண்டன பதாகையை ஏந்தியவாறு, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்தார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 92 ரூபாயை எட்டியுள்ளது. பெட்ரோல் மீதான செஸ் வரி ஒரு ரூபாயை அம்மாநில அரசு குறைத்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, ஹஸ்ரா பகுதியில் இருந்து தனது அலுவலகம் அமைந்துள்ள நபன்னாவுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா மேயரான ஃபிஹாத் ஹக்கீம் வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த செல்வி மம்தா, கையில் கண்டன பதாகை ஏந்தியிருந்தார்.