ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரிய வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
Feb 25 2021 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது என, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் வகையில், சட்டப்பிரிவு 377-ஐ நீக்கி, கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதும், அவர்கள் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதும் இந்திய திருமண கலாச்சாரத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பாலின உறவை சட்ட விரோதம் என அறிவித்த பிரிவு, 377 நீக்கப்பட்டு இருந்தாலும், இதை அடிப்படையாக வைத்து, ஒரே பாலின திருமணத்தை அடிப்படை உரிமை என யாரும் கோர முடியாது எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.