தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - கர்நாடகாவில் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்
Feb 26 2021 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகத்தில் இன்று லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் G.R. Shanmugappa தெரிவித்துள்ளார். எனவே, டீசல் விலையை உயர்வை கண்டித்து கர்நாடகத்தில் இன்று ஒருநாள் லாரிகள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேலைநிறுத்தம் காரணமாக கர்நாடகத்தில் மொத்தம் 6 லட்சம் லாரிகள் ஓடாது என்றும் அவர் தெரிவித்தார். வரும் 15-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தினர் கூறியுள்ளனர்.