சீன வெளியுறவு அமைச்சருடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கா் பேச்சு : மாஸ்கோ ஒப்பந்தத்தை அமல்படுத்த ஆலோசனை
Feb 26 2021 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi-யுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாற்றினார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi-யுடன் தொலைபேசி வாயிலாக பேசியபோது, கிழக்கு லடாக் எல்லையில் அமைதி திரும்பச் செய்ய 'மாஸ்கோ ஒப்பந்தத்தை' அமல்படுத்துவது குறித்து விவாதித்துள்ளார். 75 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை இரு நாட்டு ராணுவமும் திரும்பப் பெறுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், இந்தியா-சீனா உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாஸ்கோவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அமைச்சர் Wang Yi-ஐ, திரு. எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசியபோது, கிழக்கு லடாக்கில் அமைதியை ஏற்படுத்த இரு நாடுகளும் படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச ஒப்பந்தம் முடிவானது குறிப்பிடத்தக்கது.