இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் தொடக்கம் - சென்செக்ஸ் ஆயிரத்து 200 புள்ளிகளும், நிஃப்டி 360 புள்ளிகளும் சரிவு
Feb 26 2021 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 800 புள்ளிகள் சரிந்து, 50 ஆயிரத்து 217 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 225 புள்ளிகள் குறைந்து, 14 ஆயிரத்து 871 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 3 காசாக இருந்தது. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸ், ஆயிரத்து 200 புள்ளிகள் குறைந்து 50 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. நிஃப்டி 364 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 732 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.