புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
Mar 1 2021 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பெருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியான பாரதி வீதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த காண்டெய்னர் லாரியை சோதனை நடத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது தவறான தகவல்களை அளித்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், காண்டெய்னர் லாரி மற்றும் ஓட்டுனரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்தபோது, வீட்டு உபயோகப் பொருட்களுடன் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை லரியுடன் போலீசார் பறிமுதல் செய்து, ஓட்டுனரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.