அசாமில் சூடுபிடிக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் களம் - தேயிலை பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய பிரியங்கா
Mar 1 2021 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி வாத்ரா, அங்குள்ள பெண்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனம் ஆடினார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வாத்ரா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாமிற்கு சென்றுள்ளார். லக்ஹிம்புர் என்ற இடத்திற்கு சென்ற திருமதி பிரியங்கா காந்தி, அங்கிருந்த தேயிலை பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு அவர்களுடன் இணைந்து பாரம்பரியா நடனமான ஜூமுர் நடனமாடினார்.