இந்திய தடுப்பூசிகள் குறித்து இனி எந்த சந்தேகமும் வேண்டாம் - டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா பேட்டி
Mar 1 2021 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி போட்டுக் கொண்டதாகவும், இனி இந்திய தடுப்பூசிகள் மீது எந்த சந்தேகமும் வராது என்றும் டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் திரு நரேந்திர மோடி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் திரு. ரன்தீப் குலேரியா, கோவாக்சின் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக் கொண்டதாகவும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை அவர் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி போட்ட செவிலியர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்ததாகவும், உள்ளூர் மொழியில் அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாகவும் டாக்டர் திரு. ரன்தீப் குலேரியா கூறினார்.