புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
Mar 1 2021 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நீதிமன்றங்களைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரிக்கு மத்திய அரசு, மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், புதுச்சேரியில் உயர்நீதிமன்றக் கிளை அமைக்கவும் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.