இந்தியாவில் ஒரே நாளில் 16,838 பேருக்கு கொரோனா : நாடு முழுவதும் 1,11,71,761 பேர் கொரோனாவால் பாதிப்பு
Mar 5 2021 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 838- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கத்தின் வீரியம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 838- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 113- பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 71 ஆயிரத்து 761-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 548- ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சத்து 5 ஆயிரத்து 503-ஆக உள்ளது.