விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாருக்கு விடும் முடிவுக்கு எதிர்ப்பு : மாநில அரசின் ஆதரவுடன் ஆந்திராவில் முழு கடையடைப்பு
Mar 5 2021 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுத்துறை நிறுவனமான விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து ஆந்திர மாநில அரசின் ஆதரவுடன், முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புடன், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதை கண்டித்து, உருக்காலை பாதுகாப்புப் போராட்டக் குழு இன்று மாநிலத் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு தெலுங்கு தேசம், இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாநில அரசும் போராட்டத்தை ஆதரித்து, பிற்பகல் 1 மணி வரை அரசுப் பேருந்துகளை இயக்கப் போவதில்லை என அறிவித்தது. அதன்படி, விசாகப்பட்டினத்தில், லாரிகள், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. உணவகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.