பிரதமர் மோதிக்கு இன்று சர்வதேச விருது வழங்கப்படுகிறது : எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் எதிர்காலதீர்வுக்காக விருது அறிவிப்பு
Mar 5 2021 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு, சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் விருது இன்று வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 1983-ம் ஆண்டு டேனியல் எர்ஜின் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிகழ்வில், கடந்த 2016-ம் அண்டு முதல் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது பிரதமர் திரு.மோதிக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விருதை பிரதமர் இன்று பெற்றுக்கொள்கிறார். மேலும் இந்த நிகழ்வில், அவர் காணொலி காட்சி மூலம் உரையாற்றவும் உள்ளார். உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்காலம் குறித்த தலைமைத்துவத்தின் உறுதிப்பாடு, எரிசக்தி அணுகல், மலிவு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான தீர்வுகள் மற்றும் கொள்கைகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.