மே 13, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தேதி மாற்றம் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
Mar 5 2021 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மே 13 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறவிருந்த சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள், ரம்ஜான் பண்டிகை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ரம்ஜான் பண்டிகையன்று சி.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ரமலான் பண்டிகையன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சி.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. மே 13-ம் தேதியன்று, 12-ம் வகுப்புக்கு நடைபெறவிருந்த இயற்பியல் தேர்வு, ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 15-ம் தேதி 10-ம் வகுப்புக்கு நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு, மே 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.