கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டி - கட்சி தலைமையிடம் காங்கிரஸ் எம்.பி. விருப்பமனு தாக்கல்
Mar 5 2021 7:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறும் தேர்தல் நிலையில் அன்றைய தினம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவும் நிலையில் அத்தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி போட்டியிட கோரி சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்தார். இதற்கான விருப்பமனு கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.