பீகாரில் போபால் கஞ்ச் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி 21 பேர் பலியான வழக்கில், 9 பேருக்கு தூக்குத் தண்டனை - 4 பெண்களுக்கு ஆயுள்
Mar 5 2021 7:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் பகுதியில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி 19 பேர் உயிரிழந்த வழக்கில், 9 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கி, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு கள்ளச்சாராயம் அருந்தி 19 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு 21 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடந்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 9 பேருக்கு மரண தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.