புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை : பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் இழுபறி என தகவல்
Mar 6 2021 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
புதுவை சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியுடன் மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.