மஹாராஷ்ட்ராவில் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 216 பேருக்கு வைரஸ் தொற்று
Mar 6 2021 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிராவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு நேற்று புதிதாக 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 10,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,98,399 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 53 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52,393 ஆக அதிகரித்துள்ளது.