5 மாநிலத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை - கடந்த 7 நாட்களாக ஒரே விலையில் விற்பனை
Mar 6 2021 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலியாக பெட்ரோல்-டீசல் விலை 7-வது நாளாக இன்றும் மாற்றமின்றி காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள போதிலும், மத்திய-மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில், பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனிடையே, 2 வாரங்களுக்கும் மேலாக நாள்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுவந்த பெட்ரோல்-டீசல் விலை 7-வது நாளாக மாற்றமின்றி நீடிக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல், 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாத இறுதி வரை பெட்ரோல்-டீசல் விலை, பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாகவே பெட்ரோல்-டீசல் விலை ஏற்றமின்றி உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.