வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Mar 6 2021 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டைகளை எடுத்து சென்று வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.