நடிகை டாப்சி, இயக்‍குனர் அனுராக்‍ காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை - சுமார் 350 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்‍கான ஆவணங்கள் சிக்‍கியுள்ளதாக தகவல்

Mar 6 2021 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை டாப்சி, இயக்‍குனர் அனுராக்‍ காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், சுமார் 350 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்‍கான ஆவணங்கள் சிக்‍கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விகாஷ் பேல், நடிகை டாப்ஸி உள்ளிட்டோருக்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கோவாவில் படப்பிடிப்பில் இருந்த காஷ்யப் மற்றும் டாப்ஸியிடம் விசாரணையும் நடத்தினர். வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. தங்களுக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், திரை பிரபலங்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், வருமான வரித்துறையினரின் சோதனையில் சுமார் 350 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்‍கான ஆவணங்கள் சிக்‍கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00