கர்நாடகாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Apr 21 2021 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புமாறு அரசு போக்குவரத்து ஊழியர்களுங்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பள உயர்வு உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 7-ந் தேதி முதல், கர்நாடக மாநில போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 15 நாட்களாக போராட்டம் தொடர்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, கொரோனா பரவல் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஊதிய உயர்வு வழங்க கோரி போராடுவது சரியல்ல என தெரிவித்தார். அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் கோரிக்கையை நிறுத்தி வைத்துவிட்டு, உடனே பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்கு நோட்டீசு அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00