இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 23 பேர் கொரோனாவுக்கு பலி - தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது
Apr 21 2021 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 23 பேர் கொரோனாவுக்கு பலியாகிவுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 23 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 553-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.