பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நிகராக மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை : ராகுல் கண்டனம்
Apr 21 2021 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நிகராக மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசை திரு.ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நிகராக மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை பணக்காரர்களுக்கு சாதகமாகவும் ஏழைகளை புறக்கணிப்பதாகவும் உள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.