நாடு முழுவதும் 87% சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்
Apr 21 2021 7:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் 87 சதவீத சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். கொரோனா நிலவரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் தற்போது, 21 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், இது கடந்தாண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டார்.