அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு - கொரோனா பரவலையடுத்து, யுபிஎஸ்சி நடவடிக்கை
May 14 2021 10:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் காரணமாக, அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், யு.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்து முடிவு செய்ய அந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜூன் 27-ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.