கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடி மட்டுமே காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு
May 14 2021 11:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடி மட்டுமே காரணம் என ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி உள்ளிட்டவற்றிற்கு கடுமையான தடுட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. அந்த வகையில், நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடி மட்டுமே காரணம் என ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நிபுணர்கள் கூறுவது போல ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகைக்கும் நாம் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் நாம் உயிர்களை காப்பாற்ற முடியாது என்றும், அதை செய்வதற்கு மோடி அரசு மாதம் தோறும் 30 கோடி தடுப்பூசிகளை கொடுத்து அதை மக்களுக்கு செலுத்தி இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். ஆனால், அதில் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக விமர்சித்தார்.