சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகளும், அரசியல் நிகழ்வுகளுமே இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் - உலக சுகாதார அமைப்பு தகவல்
May 14 2021 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகளும், அரசியல் நிகழ்வுகளும்தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு B1-617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இருந்தாலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றாததும் முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளும், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை சரியாக பின்பற்றாததும் மற்றொரு காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.