கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றில் இருந்து மீண்ட 6 மாதங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை
May 14 2021 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றில் இருந்து மீண்ட 6 மாதங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறையின் தற்போதைய அறிவுறுத்தல்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றில் இருந்து மீண்ட 2 மாதங்களுக்கு பின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அளவை 6 மாதங்களாக உயர்த்த நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் தொற்று ஏற்பட்டவர்களும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றவர்களும், குணமடைந்த 2 மாதங்களுக்குப் பின் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போட வேண்டுமெனவும், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் தடுப்பூசிக்கான தேசிய நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.